செய்திகள்

பெருந்துறை அருகே தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை

Published On 2018-09-23 17:13 IST   |   Update On 2018-09-23 17:13:00 IST
தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெருந்துறை:

பெருந்துறை அருகே உள்ள சென்னிவலசை சேர்ந்தவர் வீரண்ணன். இவர் இறந்து விட்டார். இவரது மகள் பவித்ரா (வயது 21).

பவித்ரா பி.எஸ்.சி. பயா டெக்னாலஜி படித்து விட்டு பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ‘‘லேப் டெக்னீசியன்’’ ஆக வேலை பார்த்து வந்தார். இவரது தாயார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மதியம் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற பவித்ரா வீட்டுக்குள் புகுந்து கதவை பூட்டி கொண்டார்.

அக்கம் பக்கத்தினர் இதை கண்டு பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் அவரது தாயாருக்கு தகவல் கொடுத்தனர். ‘‘உங்கள் மகள் வீட்டுக்குள் புகுந்து வெளியே வரவே இல்லை. உடனே வந்து பாருங்கள்’’ என்று கூறினர்.

பதட்டம் அடைந்த தாயார் வீட்டுக்கு ஓடி வந்தார். வீட்டில் பவித்ரா தனது சேலையால் பேனில் தூக்குபோட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அவரது தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த தகவலை அறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தூக்கில் தொங்கிய இளம்பெண் பவித்ரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பவித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? காதல் விவகாரமா? அல்லது உடல் நலம் சரியில்லாததால் இந்த முடிவை எடுத்தாரா? என்று உடனடியாக தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News