செய்திகள்
தனிக்கட்சி துவங்குவீர்களா? - முக அழகிரியின் பதில் என்ன?
திருவாரூரில் செய்தியாளரகளை சந்தித்த முக அழகிரி, பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். #MKAlagiri
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் முக அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவுடன் தம்மை இணைத்து பேசுவது வெறும் வதந்தியே என்றும், கருணாநிதியின் கொள்கைகளை முழுமையாக தாம் கடைபிடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய மத்திய மாநில அரசுகளை விமர்சித்த முக அழகிரி, தற்போது அரசியல் எங்கு நடக்கிறது? போராட்டங்கள் மட்டுமே நடக்கிறது என தெரிவித்துள்ளார். திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தன்னுடைய ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாகவும், தாம் தேர்தலில் போட்டியிட்டால் அனைவரும் ஆதரவு தருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தனிக்கட்சி தொடங்குவீர்களா? என்ற நிரூபர்களின் கேள்விக்கு, தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். #MKAlagiri
திருவாரூர் மாவட்டத்தில் முக அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவுடன் தம்மை இணைத்து பேசுவது வெறும் வதந்தியே என்றும், கருணாநிதியின் கொள்கைகளை முழுமையாக தாம் கடைபிடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய மத்திய மாநில அரசுகளை விமர்சித்த முக அழகிரி, தற்போது அரசியல் எங்கு நடக்கிறது? போராட்டங்கள் மட்டுமே நடக்கிறது என தெரிவித்துள்ளார். திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தன்னுடைய ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாகவும், தாம் தேர்தலில் போட்டியிட்டால் அனைவரும் ஆதரவு தருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தனிக்கட்சி தொடங்குவீர்களா? என்ற நிரூபர்களின் கேள்விக்கு, தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். #MKAlagiri