செய்திகள்
கந்தர்வக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
கந்தர்வக்கோட்டை அருகே கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை ஒன்றியம் காட்டுநாவல் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வரவில்லை. அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள வயல்பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் காட்டுநாவல் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு கந்தர்வக்கோட்டை போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.