செய்திகள்

வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

Published On 2018-09-21 10:24 GMT   |   Update On 2018-09-21 10:24 GMT
கோவை அருகே வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் ரஞ்சித் (வயது 25).

சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை மதுக்கரை எல்.அன்ட். டி.பைபாஸ் ரோட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித் சம்பவடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ரஞ்சித்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்...

நீலாம்பூர் அருகே உள்ள கோவை-அவினாசி ரோட்டை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவல் கிடைந்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதியவரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News