செய்திகள்

தஞ்சையில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

Published On 2018-09-20 13:44 GMT   |   Update On 2018-09-20 13:44 GMT
தஞ்சையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவரும், பாபநாசம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த சரண்யா (29) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கல்லூரியில் படிக்கும் போதே கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் சுரேசும், சரண்யாவும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு சரண்யா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் நேற்றுமுன் தினம் சரண்யா தனது வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் காதலன் சுரேசுடன் தஞ்சையில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் பதிவு திருமணம் செய்து கொண்ட சுரேஷ், தனது காதல் மனைவி சரண்யாவுடன் தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அப்போது தங்களது காதலுக்கு சரண்யா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், இதனால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

இதையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா விசாரணை நடத்தினார். இருதரப்பு பெற்றோரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News