செய்திகள்

ஜெயலலிதாவின் சாதனை திட்டங்கள் தொடர மக்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள்- நாஞ்சில் பிசி அன்பழகன் பேச்சு

Published On 2018-09-20 11:36 GMT   |   Update On 2018-09-20 11:36 GMT
இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் சாதனை திட்டங்கள் தொடர மக்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட இயக்குனருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் கூறியுள்ளார். #ADMK
சென்னை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட இயக்குனருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க.வை நிறுவியவர் புரட்சித்தலைவர் என்றால் அதனை சாதனைகளில் சிகரமேற்றி வளர்த்தெடுத்தவர் புரட்சித் தலைவிதான். இந்தி என்ற அரக்கனை தமிழ் மண்ணில் கால் பதிக்க விடாமல் விரட்டி அடித்தவர் அண்ணா. தி.மு.க.வை உருவாக்கிய அண்ணா அதன் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் பாடுபட்டார். அண்ணாவின் பேச்சாற்றலும் எம்.ஜி.ஆரின் வசீகரமும் 1967 தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு வித்திட்டது.

அறநெறி தவறாமல் ஆட்சி செய்யும் மன்னனுடைய நாட்டில் நல்ல மழையும் அமோக விளைச்சலும் இருக்கும் என்பது வள்ளுவரின் வாக்கு. அம்மாவின் நல்லாட்சியை நடத்தி வரும் எடப்பாடியாரின் ஆட்சியிலும் வான் மழை பொழிந்து விவசாயம் செழித்து வளர்ந்து வருகிறது.

இனி வரும் எந்த தேர்தல்களிலும் அ.தி.மு.க.வை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது. திருப்பரங்குன்றம்-திருவாரூர் இடைத்தேர்தல்களில் அம்மாவின் சாதனை திட்டங்கள் தொடர மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள். அ.தி.மு.க. என்ற எக்கு கோட்டையை எந்த காலத்திலும் எந்த தீய சக்தியாலும் வீழ்த்த முடியாது.

இவ்வாறு அவர் பேசினார். #ADMK
Tags:    

Similar News