செய்திகள்
பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
திருவொற்றியூர் அருகே பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ராயபுரம்:
திருவொற்றியூர் கிராமத் தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவர் அதே பகுதியில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சித்ராவிடம் இருந்து செல்போனை பறித்து தப்பி செல்ல முயன்றான்.
அவனை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜ் என்பதும், ஓட்டி வந்து புதுவண்ணாரப்பேட்டையில் பருப்பு வியாபாரி ஒருவரிடம் திருடி வந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிந்தது. #tamilnews
திருவொற்றியூர் கிராமத் தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவர் அதே பகுதியில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சித்ராவிடம் இருந்து செல்போனை பறித்து தப்பி செல்ல முயன்றான்.
அவனை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜ் என்பதும், ஓட்டி வந்து புதுவண்ணாரப்பேட்டையில் பருப்பு வியாபாரி ஒருவரிடம் திருடி வந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிந்தது. #tamilnews