செய்திகள்

பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு- திருவள்ளூர் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2018-09-20 07:11 GMT   |   Update On 2018-09-20 07:11 GMT
திருவள்ளூர் பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்:

கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு ஜனவரி 1-ந் தேதி முதல் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் திருவள்ளூர் பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்கப்படுவதாகவும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும் ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து இன்று காலை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

வடக்கு ராஜவீதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கலெக்டர் மகேஸ்வரி அதிரடியாக சென்று ஆய்வு செய்தார். அங்கிருந்த பிளாஸ்டிக் பைகளின் தரத்தை பரிசோதித்தார். அவை தடை செய்யப்பட்டவை என்று தெரிந்தது. அந்த கடைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். இந்த ஆய்வு பஜார் வீதி, ராஜாஜி சாலை, சி.வி.நாயுடு சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நடந்தது.

இதனால் திருவள்ளூர் நகர பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்த ஆய்வின் போது இணை இயக்குனர் தயாளன், சார்ஆட்சியர் ரத்னா, வட்டாட்சியர் தமிழ் செல்வன், உணவு பாதுகாப்பு அலுவலர் கவின்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News