செய்திகள்

காஞ்சீபுரத்தில் 28-ந் தேதி விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

Published On 2018-09-20 06:50 GMT   |   Update On 2018-09-20 06:50 GMT
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் வரும் 28-ந் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் வரும் 28-ந் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் வேளாண்மைதுறை சம்மந்தபட்ட குறைகளை விவசாயிகள் நேரடியாகவோ அல்லது மனுவாகாவோ தெரிவிக்கலாம். மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் பெரும் அளவில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News