செய்திகள்

ஈரோட்டில் குட்கா ஊழலை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-18 13:25 GMT   |   Update On 2018-09-18 13:25 GMT
“துணை போகாதே துணை போகாதே... ஊழலுக்கு துணை போகாதே” என்று ஈரோட்டில் குட்கா ஊழலை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #DMK #Gutkha
ஈரோடு:

குட்கா ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்.

குட்கா ஊழலை கண்டித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “துணை போகாதே.. துணை போகாதே ஊழலுக்கு துணை போகாதே”, “கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்.. மத்திய- மாநில அரசுகளை கண்டிக்கிறோம்”, “கைது செய்... கைது செய்.. ஊழலுக்கு துணை போன அதிகாரிகளை கைது செய்” “நடவடிக்கை எடு.. நடவடிக்கை எடு.. அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடு” போன்ற கோ‌ஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் முன்னாள் மேயர்-குமார் முருகேஷ், முன்னாள் எம்.பி. கந்தசாமி, மாநில கொள்கை பரப்பு இணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்திரகுமார், ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணி மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் பெரியசாமி பொதுக்குழு உறுப்பினர் மயில்விழி முருகேஷ். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஈ.பிரகாஷ் ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை ராமு, பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன், செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர், தலைமை கழகப்பேச்சாளர் இளைய கோபால், கிங் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கோபி பஸ்நிலையம் அருகே ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கோபி நகர செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் முருகன், டி.என்.பாளையம் சிவபாலன், நம்பியூர் செந்தில்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். #DMK #Gutkha
Tags:    

Similar News