செய்திகள்

நிலத்தகராறில் விவசாயியை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Published On 2018-09-18 12:17 GMT   |   Update On 2018-09-18 12:17 GMT
நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் விவசாயியை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை அளித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கோபி:

கோபி அருகே உள்ள செம்மாம்பாளையம் வெள்ளியங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயி.

இவருக்கும் அவரது உறவினரான அவினாசி தாலுகா குட்டகத்தை சேர்ந்த சதீஸ்குமாருக்கும் (வயது 26) இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

கடந்த 20-11-2017 அன்று தனது தோட்டத்து வீட்டில் பழனிச்சாமி தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது சதீஸ்குமார் அங்கு வந்தார்.

அவர் பழனிச்சாமியிடம் நிலம் தொடர்பான தகராறில் ஈடுபட்டார். பின்னர் அரிவாளால் பழனிச்சாமியை வெட்டினார். தடுக்க வந்த பழனிச்சாமியின் மகள் துரைசாமிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் பழனிச்சாமி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக வரப்பாளையம் போலீசார் சதீஸ்குமாரை கைது செய்த கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் இன்று நீதிபதி மணி தீர்ப்பு கூறினார். பழனிச்சாமியை கொலை செய்த வழக்கில் சதீஸ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனகோட்டி ராம் ஆஜராகி வாதாடினார். #tamilnews
Tags:    

Similar News