செய்திகள்

வேலூரில் கார்-பைக்கை தொங்கவிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-18 11:18 GMT   |   Update On 2018-09-18 11:18 GMT
வேலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் கார், பைக்கை தொங்க விட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #DMK
வேலூர்:

அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க.வினர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அவை தலைவர் முகமது சகி, மாவட்ட மாணவ அணி செயலாளர் சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த மேடைக்கு இருபுறமும் கிரேன் மூலம் கார், பைக் கட்டி தொங்க விட்டிருந்தனர்.

வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, வசந்தி ரவி, பொருளாளர் கண்ணையன், சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல், நகர செயலாளர் பிரகாஷ், புகழேந்தி, சக்திவேல், ஒன்றிய செயலாளர் சேஷாவெங்கட், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, சுந்தரம், மாவட்ட அவை தலைவர் அசோகன், முன்னாள் ஊராட்சி  தலைவர் பத்மநாபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ்செல்வி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். நல்லதம்பி எம்.எல்.ஏ. நகர செயலாளர் ராஜேந்திரன், ஜோதிராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. சூரியகுமார், கந்திலி ஒன்றிய செயலாளர் அன்பழகன், ராஜமாணிக்கம் உள்பட ஏராமானோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் உதவி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட செயலாளர் எ.வ.வேலு, சிவானந்தம், எம்.எல்.ஏக்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, மற்றும் ஸ்ரீதரன், அண்ணாதுரை, கார்த்தி வேல்மாறன், முன்னாள் எம்.பி. வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK
Tags:    

Similar News