செய்திகள்

சங்கரன்கோவிலில் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

Published On 2018-09-18 09:54 GMT   |   Update On 2018-09-18 09:54 GMT
ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக கூறி சங்கரன்கோவிலில் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

சங்கரன்கோவில், செப்.18-

சங்கரன்கோவில் தாலுகா வன்னிக்கோனேந்தல் அருகே கீழ நரிக்குடி, மேல நரிக்குடி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாகவும், முறைகேடு நடப்பதாகவும் கூறி அப்பகுதி கிராம மக்கள் சங்கரன்கோவில் தி.மு.க. செயலாளர் ராஜதுரை தலைமையில் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதில் நகர இளைஞரணி அமைப்பாளர் சரவணன், தகவல் தொழிற்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் குமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் டைட்டஸ், இளங்கோ மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முற்றுகையிட்ட கிராம மக்களுடன் சிவில் சப்ளை தாசில்தார் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின்பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News