செய்திகள்

கோபி அருகே வாய்க்காலில் மிதந்து வந்த 2 பெண் பிணம்- போலீசார் தீவிர விசாரணை

Published On 2018-09-18 09:27 GMT   |   Update On 2018-09-18 09:27 GMT
கோபி அருகே வாய்க்காலில் மிதந்த வந்த 2 பெண் பிணங்களை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

கோபி அருகே உள்ள கடத்தூர் போலீஸ் பகுதிக்குட்பட்ட குப்பந்துறையில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது.

இந்த வாய்க்கால் கரையோரம் இன்று 2 பெண் பிணங்கள் மிதந்து வந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு பெண்ணுக்கு 35-வயது இருக்கும். இன்னொரு பெண்ணுக்கு 20-வயது இருக்கும் இந்த 2 பெண்களும் ஒரே பகுதியை சேர்ந்தவர்களா? எப்படி இறந்தார்கள்? வாய்க்காலில் குளிக்கும்போது தவறி விழுந்தார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்ற விவரம் தெரியவில்லை.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு கடத்தூர் போலீசார் விரைந்து சென்றனர்.

வாய்க்காலில் மிதந்த 2 பெண் பிணங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவுப்செய்து அந்த 2 பெண்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தார்கள்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News