செய்திகள்
பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நம்பியூர் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை- அரசு பள்ளி முற்றுகை

Published On 2018-09-18 09:17 GMT   |   Update On 2018-09-18 09:17 GMT
நம்பியூர் அருகே பிளஸ்-2 மாணவியின் தற்கொலைக்கு அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் தான் காரணம் என மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
நம்பியூர்:

நம்பியூர் அருகே உள்ள பட்டிமணியக்காரன் பாளையத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் செல்வராஜ் என்பவரது மகள் அம்சலதா என்ற மாணவி பிளஸ்-2 படித்து வந்தார். இந்த மாணவி கடந்த 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வீட்டில் பூச்சிமருந்து (வி‌ஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் நம்பியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மாணவி தற்கொலைக்கு அந்த பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியர்தான் காரணம் என்று கூறி இன்று அப்பள்ளியை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை சமரசம் செய்தனர். #tamilnews
Tags:    

Similar News