செய்திகள்

வளவனூர் அருகே பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

Published On 2018-09-17 11:48 GMT   |   Update On 2018-09-17 11:48 GMT
விழுப்புரம் அடுத்த வளவனூர் அருகே பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் அடுத்த வளவனூர் அருகே உள்ள வி.புதூர்கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). ரவுடியான இவர் மீது வளவனூர் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அடி, தடி தகராறு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்துக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக மகேசை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மகேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மகேசை வளவனூர் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News