செய்திகள்

வேப்பூர் கூட்ரோட்டில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2018-09-17 17:10 IST   |   Update On 2018-09-17 17:10:00 IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வேப்பூர்:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள முடியனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வேல்முருகன் (வயது 35), மணி (30). இவர்கள் 2 பேரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

தற்போது அவர்கள் 2 பேரும் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே என்.நாரையூருக்கு செல்ல வேல்முருகனும், மணியும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் இன்று காலை 6 மணிக்கு வேப்பூர் கூட்ரோடு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருநதனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த தடுப்பு கட்டை மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வேல்முருகன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மணி படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மணியை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News