செய்திகள்

சென்னையில் பிரதமர் மோடி தம்பியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

Published On 2018-09-17 07:32 GMT   |   Update On 2018-09-17 07:32 GMT
பிரதமர் மோடி தம்பியுடன் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #opanneerselvam

சென்னை:

பிரதமர் நரேந்திரமோடியின் இளைய சகோதரர் பிரகலாத்மோடி. சென்னையில் மோடி பிறந்த நாளையொட்டி கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள மருத்துவ முகாம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதற்காக பிரகலாத்மோடி நேற்று சென்னை வந்தார்.

கிண்டி ராஜ்பவனில் தங்கியிருந்த அவரை தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் சில முக்கிய பிரமுகர்களும் அவரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு பிரகலாத் மோடி திருப்பதி புறப்பட்டு சென்றார். மோடி பிறந்த நாளையொட்டி இன்று அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தார்.

இன்று மதியம் தாம்பரத்தில் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  #opanneerselvam

Tags:    

Similar News