செய்திகள்

பல்லடத்தில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்- வடமாநில வாலிபர் கைது

Published On 2018-09-16 12:10 GMT   |   Update On 2018-09-16 12:10 GMT
பல்லடத்தில் விற்பனைக்கு வைத்திருந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து வடமாநில வாலிபரை கைது செய்தனர்.

பல்லடம்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணநாயக் (வயது32). இவரது மனைவி காமினி நாயக் (25). இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது. பல்லடம் சின்னூர் பிரிவில் உள்ள வாடகை வீட்டில் தங்கிஅருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர் கஞ்சா விற்பனை செய்வதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கிருஷ்ணநாயக்யை பிடித்து விசாரணை நடத்தியதில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 18 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கிருஷ்ணநாயக்யையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News