செய்திகள்
சிங்கம்புணரி அருகே பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
சிங்கம்புணரி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வம். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது 29). சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் லெட்சுமியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வம். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது 29). சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் லெட்சுமியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.