செய்திகள்

மதுரையில் நிலம் வாங்கித்தருவதாக கூறி வெளிநாடு வாழ் தமிழரிடம் ரூ.1 கோடி மோசடி

Published On 2018-09-14 13:19 GMT   |   Update On 2018-09-14 13:19 GMT
நிலம் வாங்கித்தருவதாக கூறி வெளிநாடு வாழ் தமிழரிடம் ரூ.1 கோடி மோசடி செய்தததாக அரசு வங்கி மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா நகரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் பாஸ்கர் (வயது 56). மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர், அங்கு தொழில் செய்து வருகிறார்.

இவர் மதுரை காளவாசலில் உள்ள அரசு வங்கியில் வங்கிக்கணக்கு வைத்துள்ளார். ராஜமாணிக்கம் பாஸ்கர் மதுரையில் நிலம் வாங்க முடிவு செய்து செய்திருந்தார்.

இந்த நிலையில் அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி மேலாளர் நல்லபெருமாள் என்பவர் ராஜமாணிக்கம் பாஸ்கரை செல்போனில் தொடர்பு கொண்டு மானகிரி பகுதியில் நிலம் விலைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதை நம்பி அவர் முன் பணமாக ரூ.20 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. தொடர்ந்து நிலம் வாங்குவதற்கும், பத்திரப்பதிவுக்கும் செலவுகள் ஏற்படும். எனவே கையெழுத்திட்ட பணம் நிரப்பாத காசோலையை அனுப்புமாறு நல்ல பெருமாள் கூறியுள்ளார். இதை நம்பி அவரும் தான் கையெழுத்திட்ட காசோலையை அனுப்பினார்.

இந்த நிலையில் ராஜமாணிக்கம் பாஸ்கர் மதுரை குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் நிலம் வாங்குவதற்காக தான் கொடுத்த காசோலை மூலம் ரூ.1 கோடியே 59 லட்சத்தை நல்ல பெருமாள் எடுத்துள்ளார். இதற்கு உடந்தையாக மீனாட்சி சுந்தரம், அவரது மனைவி பராசக்தி, பாலாஜி வெங்கடேசன் ஆகியோர் இருந்துள்ளனர்.

மேலும் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை வாங்கியதாகவும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். எனவே அரசு வங்கி மேலாளர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி நல்லபெருமாள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News