செய்திகள்
வாலாஜா அருகே வாலிபர் தற்கொலை- போலீசார் விசாரணை
வாலாஜா அருகே வாலிபர் தாக்கியதால் மனமுடைந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
வாலாஜா ஒழுகூர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் விஜயன் மகன் அஜித் (வயது 18). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை பைக்கில் ஒழுகூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சற்று தூரம் சென்று கொண்டிருந்தபோது அவரது பைக்கில் திடீரென பழுது ஏற்பட்டு உள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரிடம், அஜித் பைக் பழுது சரி செய்ய இந்த பகுதியில் கடை உள்ளதா என்று கேட்டுள்ளார்.
அப்போது அந்த வாலிபர் நான் என்ன மெக்கானிக்கா? என்று ஆவேசமடைந்து அஜித்தை தாக்கியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அஜித் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா ஒழுகூர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் விஜயன் மகன் அஜித் (வயது 18). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை பைக்கில் ஒழுகூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சற்று தூரம் சென்று கொண்டிருந்தபோது அவரது பைக்கில் திடீரென பழுது ஏற்பட்டு உள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரிடம், அஜித் பைக் பழுது சரி செய்ய இந்த பகுதியில் கடை உள்ளதா என்று கேட்டுள்ளார்.
அப்போது அந்த வாலிபர் நான் என்ன மெக்கானிக்கா? என்று ஆவேசமடைந்து அஜித்தை தாக்கியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அஜித் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.