செய்திகள்

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்

Published On 2018-09-14 06:46 GMT   |   Update On 2018-09-14 06:46 GMT
கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் தகினிக்கோட்டை தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சர்மிளா (19). இவர் கொழுந்துலூரில் உள்ள தனியார் கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம். படித்து வருகிறார்.

கடந்த 12-ந் தேதி கல்லூரிக்கு சென்ற சர்மிளா மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சர்மிளாவின் தாய் கவிதா கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரண்வாயல் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி (27). காது மற்றும் பேச முடியாத மாற்றுத்திறனாளி. குன்றத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 12-ந் தேதி வேலைக்கு சென்ற நந்தினி மாயமானார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் இளம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோமதி (21). கடந்த 12-ந் தேதி ஜெராக்ஸ் எடுக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி புகாரின் பேரில் மப்பேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News