செய்திகள்

சென்னையில் கமல்ஹாசனுடன், யோகேந்திர யாதவ் சந்திப்பு

Published On 2018-09-10 21:25 GMT   |   Update On 2018-09-10 21:25 GMT
ஸ்வராஜ் இந்திய கட்சி தலைவரும், சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நேற்று நேரில் சந்தித்தார். #KamalHassan #YogendraYadav
சென்னை:

ஸ்வராஜ் இந்திய கட்சி தலைவரும், சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது இருவரும் தமிழக விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்திக்கச் சென்ற யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு, கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு கமல்ஹாசனுக்கு இந்த சந்திப்பில் யோகேந்திர யாதவ் நன்றி கூறினார். அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த யோகேந்திர யாதவ், “மக்கள் நீதி மய்யத்தின் தேவை தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிற்கும் இன்றியமையாததாக இருக்கும்”, என்று கூறினார்.

மேற்கண்ட தகவல் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #KamalHassan #YogendraYadav
Tags:    

Similar News