செய்திகள்

திருவள்ளூரில் தயாராகும் விநாயகர் சிலைகள்- ரூ. 15 ஆயிரம் வரை விற்பனை

Published On 2018-09-07 07:00 GMT   |   Update On 2018-09-07 07:00 GMT
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருவள்ளூரில் தயாராகும் விநாயகர் சிலைகள் ரூ. 100 முதல் ரூ. 15000 வரை விற்கப்படுகிறது.
திருவள்ளூர்:

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

விழாவையொட்டி விநாயகர் சிலையை பொது இடங்களில் 3 நாள், 5 நாள், 7 நாள்கள் என வைத்து பூஜித்து, பின்னர் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்காக திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையோரம் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சாட் பவுடர் மூலம் விநாயகர் சிலைகளை பல வடிவங்களில் வடிவமைத்து வருகின்றனர்.

விநாயகர் சிலை சுமார் 1 அடி உயரம் முதல் 13 அடி உயரம் வரை வடிவமைக்கின்றனர். ரூ. 100 முதல் 15,000 வரை விற்கப்படுகிறது. பாம்பு விநாயகர், சிவன் பார்வதியுடன் விநாயகர், கிருஷ்ணருடன் விநாயகர், மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகன விநாயகர், கருட வாகன விநாயகர் உள்ளிட்ட பல வடிவங்களில் சிலைகளை தயார் செய்து விற்பனைக்கு தயாராக வைத்துள்ளனர்.

இது குறித்து சிலை செய்யும் தொழிலாளர்கள் கூறும்போது சிலைகளில் பூசப்படும் வண்ணங்கள் ரசாயனக் கலவை இல்லாமல், எளிதில் நீர் நிலையில் கரையக்கூடியது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் சிலையில் பயன்படுத்தி வருகிறோம்’ என்றனர். #tamilnews
Tags:    

Similar News