செய்திகள்

வந்தவாசியில் குரங்கு, நாய்கள் தொல்லை- நகராட்சியில் பொதுமக்கள் புகார்

Published On 2018-09-06 17:18 GMT   |   Update On 2018-09-06 17:18 GMT
வந்தவாசியில் குரங்கு மற்றும் நாய்கள் தொல்லைகள் அதிகமாக இருப்பதால் தொல்லையிலிருந்து விடுவித்து உதவிடுமாறு நகராட்சியில் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

வந்தவாசி:

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் 3 வது வார்டு 5 வது குறுக்கு தெரு பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு 5வது குறுக்கு தெருவில் நிரந்தரமாக வசித்துவருகிறோம். எங்களுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அட்டையும் உள்ளது. கடந்த 6 மாத காலமாக குரங்குகள் மற்றும் நாய்கள் தொல்லைகள் அதிகமாக உள்ளது.

இதனை நேரிடையாக பார்வையிட்டு எங்களுக்கு குரங்குகள், மற்றும் நாய்கள் தொல்லையிலிருந்து விடுவித்து உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News