செய்திகள்

செம்மஞ்சேரியில் தடுப்பூசி போட்ட குழந்தை பாதிப்பு - உறவினர்கள் ஆஸ்பத்திரியில் முற்றுகை

Published On 2018-09-06 15:07 IST   |   Update On 2018-09-06 15:07:00 IST
செம்மஞ்சேரியில் தடுப்பூசி போட்ட குழந்தைக்கு வலிப்பு வந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
சோழிங்கநல்லூர்:

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்ராஜா , இவரது மனைவி சரோஜா. இவர்களுடைய ஹரிணி என்ற 4 மாத பெண் குழந்தைக்கு செம்மஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பு ஊசி போட்டுள்ளனர்.

வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் ஹரிணிக்கு வலிப்பு வந்தது. இதனால் மருத்துவர் கொடுத்த மாத்திரையை கொடுத்துள்ளனர். மீண்டும் குழந்தைக்கு வலிப்பு வந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு நர்சிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 4 மாத பெண் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக பெற்றோர் செம்மஞ்சேரி போலீசார் புகார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News