செய்திகள்

பேரணியில் பங்கேற்ற அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவார்களா? - மு.க.அழகிரி கேள்வி

Published On 2018-09-05 07:41 GMT   |   Update On 2018-09-05 07:41 GMT
சென்னையில் இன்று தான் நடத்திய அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்குவார்களா? என மு.க.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். #MKAlagiri #PeaceRally #DMK
சென்னை:

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். கட்சி மேலிடம் அவரைக் கண்டுகொள்ளாத நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்று சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தினார்.

திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து கடற்கரை சாலை வரை பேரணி நடைபெற்றது. பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



பின்னர் மு.க. அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும், பேரணிக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தனது பேரணியில் சுமார் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் வந்திருப்பதாக கூறிய அவர், இந்த பேரணியில் பங்கேற்றதற்காக அனைவரையும் நீக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த பேரணிக்கான காரணம் குறித்து கேட்டபோது, மறைந்த தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மட்டுமே இந்த பேரணி நடத்தப்பட்டதாகவும், வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்றும் அழகிரி கூறினார். #MKAlagiri #PeaceRally #DMK
Tags:    

Similar News