செய்திகள்
சூளகிரி அருகே விபத்தில் படுகாயம் அடைந்த டேங்கர் லாரி டிரைவர் பலி
சூளகிரி அருகே விபத்தில் படுகாயம் அடைந்த டேங்கர் லாரியின் டிரைவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது சாமல்பள்ளம். கடந்த 1-ந் தேதி ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்த வேன், கார், லாரி என 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது பால் டேங்கர் லாரி தறிகெட்டு ஓடி மோதியது.
கடைசியாக அந்த பால் டேங்கர் லாரி ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் என்னும் இடத்தில் தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதில் லாரியை ஓட்டிச்சென்ற நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குப்பச்சிப்பாளையத்தைச் சேர்ந்த நடராஜ் (வயது 53) என்பவர் படுகாயம் அடைந்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நடராஜ் இறந்தார்.
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.எம்.குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது சாமல்பள்ளம். கடந்த 1-ந் தேதி ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்த வேன், கார், லாரி என 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது பால் டேங்கர் லாரி தறிகெட்டு ஓடி மோதியது.
கடைசியாக அந்த பால் டேங்கர் லாரி ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் என்னும் இடத்தில் தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதில் லாரியை ஓட்டிச்சென்ற நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குப்பச்சிப்பாளையத்தைச் சேர்ந்த நடராஜ் (வயது 53) என்பவர் படுகாயம் அடைந்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நடராஜ் இறந்தார்.
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.எம்.குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.