செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 239 பேர் மீது வழக்கு

Published On 2018-09-04 13:50 GMT   |   Update On 2018-09-04 13:50 GMT
ஜெயங்கொண்டத்தில் சாலை விதிகளை மீறியவர்கள் 239 பேர் மீது வழக்கு பதிவுசெய்து அவர்களிடமிருந்து ரூ.24 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கபட்டது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் தற்போது வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி வாகனங்களில் அதிவேகம், அதிக பாரம் ஏற்றுவது, போதையில் வாகனம் ஓட்டுவது, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றது, லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச்சென்றது, லைசென்ஸ் இல்லாமல் மற்றும் சீருடை அணியாமலும் வாகனங்களை ஓட்டியவர்களுக்கும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாமலும், இன்ஸ்சூரன்ஸ் இல்லாமலும் வாகனம் ஓட்டியது மற்றும் பைக்கில் மூன்று பேரை ஏற்றிக் கொண்டு சென்றது உள்ளிட்ட பலவகையான சாலை விதிகளை மீறியவர்கள் 239 பேர் மீது வழக்கு பதிவுசெய்து அவர்களிடமிருந்து ரூ.24 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கபட்டது.

தொடர்ந்து இது போன்று போக்குவரத்து விதிகளை மீறி வாகங்களை இயக்கக்கூடாது எனவும், இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.
Tags:    

Similar News