செய்திகள்

வில்லியனூர் அருகே கல்லூரி சென்ற மாணவி மாயம்

Published On 2018-09-04 11:27 GMT   |   Update On 2018-09-04 11:27 GMT
வில்லியனூர் அருகே கல்லூரி செல்வதாக கூறி சென்ற மாணவி மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் சரளா (வயது 18). இவர், மதகடிப்பட்டில் உள்ள காமராஜர் அரசு கலை கல்லூரியில் பி.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை கல்லூரிக்கு செல்வதாக சரளா பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் இல்லை.

இதையடுத்து சரளாவின் தாய் மாரியம்மாள் தனது மகள் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி சரளாவை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News