செய்திகள்
கும்பகோணத்தில் வெளிமாநில மது விற்ற வாலிபர் கைது
கும்பகோணத்தில் வெளிமாநில மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே பாலக்கரை பெருமாண்டி பகுதியில் அனுமதியின்றி வெளிமாநில மதுபானம் பதுக்கி வைத்து விற்பணை செய்யப்படுவதாக கும்பகோணம் மதுவிலக்கு போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று பாலக்கரை பெருமாண்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு திருட்டுதனமாக மது விற்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கும்பகோணம் வேதவிநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் அருண்குமார் (வயது 27) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த 85 வெளிமாநில மது பாட்டில்களையும், 55 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அவரை போலீசார் கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.