செய்திகள்
மதுரையில் மூதாட்டி உள்பட 3 பேர் தற்கொலை
மதுரையில் மூதாட்டி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கோரிப்பாளையம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் காதர்ஒலி (வயது28). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனஉளைச்சலில் இருந்த காதர்ஒலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செல்லூர் தாகூர் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மனைவி நிர்மலா (60). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கே.புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி அம்புஜம் (65). இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அம்புஜம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.