செய்திகள்

கோவையில் கடன் நெருக்கடி காரணமாக பெற்றோரை குத்திக்கொன்று மகன் தற்கொலை

Published On 2018-09-03 12:21 GMT   |   Update On 2018-09-03 12:25 GMT
கோவை ஆவாரம் பாளையத்தில் கடன் நெருக்கடி காரணமாக பெற்றோரை கத்தியால் குத்திக்கொன்று மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kovai
கோவை:

கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பாலமுருகன் - லட்சுமி தம்பதி. இவரது மகன் வைரமுத்து  கடன் நெருக்கடியால் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால், தனது பெற்றோரை கத்தியால் குத்திக்கொன்ற வைரமுத்து, பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், வைரமுத்து எழுதிய தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News