செய்திகள்

ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி - கிங்மேக்கர்ஸ் அகாடமி மாணவர்களுக்கு விருது வழங்குகிறார் பிரணாப் முகர்ஜி

Published On 2018-09-03 09:42 GMT   |   Update On 2018-09-03 09:42 GMT
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற கிங்மேக்கர்ஸ் அகாடமி மாணவர்களுக்கு வருகிற 6-ந்தேதி முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்குகிறார்.
சென்னை:

அண்ணாநகர் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் புதிய வளாக திறப்பு விழா மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா வருகிற 6-ந் தேதி மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது.

விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு புதிய வளாகத்தை திறந்து வைத்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி விருது வழங்குகிறார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக ஏற்பாடுகளை கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்.அகாடமி நிர்வாக இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் செய்து வருகிறார்.
Tags:    

Similar News