செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

Published On 2018-09-01 06:42 GMT   |   Update On 2018-09-01 06:42 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பட்டு நூல் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இருங்காட்டுகோட்டையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து ராமலிங்கம் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News