செய்திகள்

பூதப்பாண்டி அருகே வீட்டில் செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்

Published On 2018-08-31 14:34 GMT   |   Update On 2018-08-31 14:34 GMT
பூதப்பாண்டி அருகே வீட்டின் மேஜையை உடைத்து 3 செல்போன் திருடிய வாலிபரை ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

பூதப்பாண்டியை அடுத்த இறச்சக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது53). தொழிலாளி. இவர் வீட்டில் இருந்து வெளியேச் சென்றிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் இருந்த மேஜையை உடைத்து அதில் இருந்து 3 செல்போன்கள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சுந்தரமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கொள்ளையன் குறித்து அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் மனோகரன் வீட்டில் செல்போன் திருடியதாக அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News