செய்திகள்

குடவாசலில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி- பேத்தி காயம்

Published On 2018-08-29 11:26 GMT   |   Update On 2018-08-29 11:26 GMT
மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற பேத்தி படுகாயம் அடைந்தார்.

குடவாசல்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே எட்டியலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 55). ராஜகோபால் தனது பேத்தி சாருமதியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது மணக்கால் ஜீவா நகரை சேர்ந்த மணிகண்டன் (22) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். திடீரென மணிகண்டனின் மோட்டார் சைக்கிள், ராஜகோபால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜகோபாலுக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சாருமதிக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து படுகாயம் அடைந்த ராஜகோபால், சாருமதியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகோபால் பரிதாபமாக இறந்தார். சாருமதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து குடவாசல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சந்தான மேரி, ராஜா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News