செய்திகள்

ஓசூர் அருகே வேன்-லாரி மோதல்- 10 பேர் காயம்

Published On 2018-08-27 17:43 IST   |   Update On 2018-08-27 17:43:00 IST
டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி அருகே கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற டெம்போ டிராவலர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த டெம்போ டிராவலரில் 10க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள்.

கேரளாவில் இருந்து பெங்களூர் நெலமங்கலம் அருகே உள்ள நாகர்பாலி என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது லாரி ஒன்று இவர்கள் வந்த டெம்போ டிராவலர் மீது மோதியது. வாகனத்தில் இருந்த மார்ட்டின் (வயது74), மேரி (65), ஜோசப் (72), டிரிஷா (65), டிரைவர் கங்காதர் (25) உள்ளிட்ட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த அனைவரையும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஓசூர் அட்கோபோலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News