செய்திகள்

குலசேகரன்பட்டினத்தில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை திருட முயற்சி - 2 பேர் கைது

Published On 2018-08-27 10:32 GMT   |   Update On 2018-08-27 10:32 GMT
குலசேகரன்பட்டினத்தில் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை பிடித்து ஆட்டோவில் ஏற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள மணப்பாடு புதுக்குடியேற்று கிராமத்தை சேர்ந்தவர் பொன்பாண்டி (வயது58). இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது ஆடுகளை குலசேகரன்பட்டினம் காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு அங்குள்ள ஒரு மரத்தின் கீழ் நிழலுக்காக அமர்ந்து இருந்தார்.

அப்போது அங்கு ஆட்டோவில் வந்த இருவர் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை பிடித்து ஆட்டோவில் ஏற்றினர். இதைப் பார்த்த பொன்பாண்டி திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் ஆட்டோவில் வந்த இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்பு அவர்களை குலசேகரன்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை இருவரிடமும் விசாரணை நடத்தினர்

விசாரணையில் அவர்கள் குலசேகரன்பட்டினம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலைமணி (35), அவரது நண்பர் உதயமார்த்தாண்ட கோவிலை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இசக்கிபாண்டி (35) என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஐர்படுத்தினர்.
Tags:    

Similar News