செய்திகள்

சிவகங்கை அருகே விபத்தில் என்ஜினீயர் பலி

Published On 2018-08-27 06:40 GMT   |   Update On 2018-08-27 06:40 GMT
சிவகங்கை அருகே விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மானாமதுரை:

மானாமதுரை கண்ணார் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 38). இவர் சிவகங்கையில் உள்ள கட்டிட நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று மாலை வேலை முடிந்து சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். செய்களத்தூர் விலக்கில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

அப்போது பரமக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் முகமது இஸ்மாயில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News