செய்திகள்

பெரியகுளம் அருகே திருமணமான 2 வருடத்தில் இளம்பெண் மர்ம மரணம்

Published On 2018-08-25 11:33 GMT   |   Update On 2018-08-25 11:33 GMT
பெரியகுளம் அருகே திருமணமான 2 வருடத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:

பெரியகுளம் லெட்சுமிபுரம் நேருஜிநகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கும் செல்வி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அவரது அண்ணன் மணிவண்ணனுக்கு கண்ணன் குடும்பத்தினர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். தனது தங்கை மர்மமாக இறந்தது குறித்து அவர்களிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை.

இத குறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் மணிவண்ணன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வி எவ்வாறு இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 2 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News