செய்திகள்

திருச்சியில் மணப்பெண் மாயமானதால் திருமணம் நிறுத்தம்

Published On 2018-08-25 16:03 IST   |   Update On 2018-08-25 16:03:00 IST
திருச்சி அருகே மணப்பெண் மாயமானதால் திருமணம் நிறுத்தப்பட்டது. மணப்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 55), ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்.

இவரது மகள் மோனிகா (21) . இவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு திடீரென மோனிகா மாயமானார்.

இது குறித்து அவரது தந்தை பாலக்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மோனிகா எங்கு சென்றார் , திருமணம் பிடிக்காமல் சென்றாரா? அல்லது யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.

Tags:    

Similar News