செய்திகள்
திருச்சியில் முக அழகிரி ஆதரவாளர்கள் ஆலோசனை
செப்டம்பர் 5-ந்தேதி சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி நடைபெறும் அமைதி பேரணி குறித்து திருச்சியில் அழகிரி ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர்.
திருச்சி:
தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு செப்டம்பர் 5-ந் தேதி அமைதி பேரணி நடத்தப்படும் என்றும், அந்த பேரணியில் கருணாநிதியின் உண்மை தொண்டர்கள் தன் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபித்து காட்டுவேன் என்றும் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி கூறினார். இதையடுத்து நேற்று மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில் திருச்சியில் அழகிரியின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர முன்னாள் தி.மு.க. பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் சங்கர்கணேஷ், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறுகையில், "வருகிற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அழகிரியை கட்சியில் சேர்த்து அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். செப்டம்பர் 5-ந்தேதி சென்னையில் தலைவர் கருணாநிதி நினைவிடம் நோக்கி நடைபெறும் பேரணியில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் பங்கேற்பது என முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு செப்டம்பர் 5-ந் தேதி அமைதி பேரணி நடத்தப்படும் என்றும், அந்த பேரணியில் கருணாநிதியின் உண்மை தொண்டர்கள் தன் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபித்து காட்டுவேன் என்றும் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி கூறினார். இதையடுத்து நேற்று மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில் திருச்சியில் அழகிரியின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர முன்னாள் தி.மு.க. பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் சங்கர்கணேஷ், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறுகையில், "வருகிற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அழகிரியை கட்சியில் சேர்த்து அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். செப்டம்பர் 5-ந்தேதி சென்னையில் தலைவர் கருணாநிதி நினைவிடம் நோக்கி நடைபெறும் பேரணியில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் பங்கேற்பது என முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.