செய்திகள்

குருபரப்பள்ளி அருகே நிலத்தகராறில் 2 பேர் கைது

Published On 2018-08-24 13:28 GMT   |   Update On 2018-08-24 13:28 GMT
குருபரப்பள்ளி அருகே நிலத்தின் எல்லை பிரச்சினையில் மோதிக் கொண்ட தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள ஆவல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார்(35). லாரி டிரைவர். இவருக்கும், இவரது உறவினரான பார்வதி(45) என்பவருக்கும் அருகருகே நிலம் உள்ளது. இந்நிலையில் நிலத்தின் எல்லை பிரச்சினை காரணமாக அடிக்கடி இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பார்வதி தரப்பில் மூர்த்தி (23), ஈஸ்வரன்(21), உறவினரான சின்னராஜ்(36) ஆகியோர் சசிகுமார் மற்றும் உறவினர்களை தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதில் காயம் அடைந்த சசிகுமார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து கொடுத்த புகாரின் பேரில் சின்னராஜ் மற்றும் மூர்த்தி ஆகியோரை குருபரப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தா கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

இதேபோல் பார்வதி கொடுத்த புகாரின் பேரில், சசிகுமார், உறவினர்களான சுந்தரம்(45), லோகநாதன்(40), இந்திரா(35), பத்மா(55) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News