செய்திகள்

நாராயணசாமியின் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளதா?- அன்பழகன் எம்எல்ஏ கேள்வி

Published On 2018-08-24 11:19 GMT   |   Update On 2018-08-24 11:19 GMT
புதுவை காவல்துறை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லையா? என்பதை நாராயணசாமி தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்பழகன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார். #Narayanasamy

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் ஆளும் காங்கிரஸ் அரசின் தவறான பணி நியமன விதியில் திருத் தம் செய்ததால் காவலர் பணியில் சேருவதில் சிக்கல் ஏற்பட்டு இளைஞர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது. காவலர் பணிக்கான வயது வரம்பு 24 வயது என்பதை 2 வருடம் குறைத்து அறிவித்துள்ளதால் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத விரக்தியில் உள்ளனர்.

புதுவையில் அரசு பணி என்பது காணல் நீராக இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் வயது வரம்பில் 2 வருடம் குறைக்கப்பட்ட செயல் தேவையற்ற ஒன்றா கும். பணி நியமன விதியில் திருத்தம் செய்து புதுவையில் மட்டும் அனைத்து பிரிவினருக்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இதனால் காவலர் பணியில் சேரலாம் என காத்திருந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் காவலர் பணிக்கான வயது வரம்பு பொதுப் பிரிவுக்கு 24, ஓ.பி. சி.க்கு 27 வயது, எஸ்.சி.க்கு 29 என்ற நிலை உள்ளது. ஆனால் புதுவையில் மட்டும் 2 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளதை புதுவை முதல் - அமைச்சர் நாராயணசாமி ஏற்றுக் கொள்கிறாரா? இது சம்பந்தமாக பல்வேறு எதிர்ப்புகள் படித்த இளை ஞர்கள் மத்தியில் எழுப்பப்பட்ட பிறகு வயது வரம்பை திருத்தம் செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பேன் என்பது தேவையற்ற ஒன்றாகும்.

வயது வரம்பை குறைக்கும் முடிவினை முதல்- அமைச்சருக்கு தெரியாமல் துறை அதிகாரிகள் எடுத்தார்களா? அல்லது கவர்னர் இதற்காக உத்தர விட்டாரா? முதல்-அமைச்சருக்கு தெரியாமல் வயது வரம்பு குறைக்கப்பட்டதால் காவல் துறை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லையா? என்பதை முதல்-அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

எனவே புதுவை மாநில படித்த இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு குறைக்கப்பட்ட வயது வரம்பை மீண்டும் 24 ஆக மாற்ற முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும். அதே போன்று மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய 4 சதவீத இடஒதுக்கீட்டையும் இதில் சேர்த்து அறிவிக்க முதல்-அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.  #Narayanasamy 

Tags:    

Similar News