செய்திகள்
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- இளம்பெண் தற்கொலை
கோவை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை கணபதி அருகே உள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் தீபா (வயது 20). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். தீபா கடந்த 1 வருடங்களாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் காதலை கைவிடுமாறு வலியுறுத்தினர். இதனால் கடந்த சில நாட்களாக தீபா மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தீபாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கோவை கணபதி அருகே உள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் தீபா (வயது 20). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். தீபா கடந்த 1 வருடங்களாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் காதலை கைவிடுமாறு வலியுறுத்தினர். இதனால் கடந்த சில நாட்களாக தீபா மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தீபாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews