செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிவாரணப் பொருட்கள்- கலெக்டர் லதா தகவல்

Published On 2018-08-23 09:38 GMT   |   Update On 2018-08-23 09:38 GMT
கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ரூ.25 லட்சம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கலெக்டர் லதா கூறியுள்ளார். #keralafloods
சிவகங்கை:

கேரள மாநிலத்தில் தொடர் மழையின் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அனைத்து பகுதிகளில் இருந்து நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க வசதியாக பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், கொடையாளர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட உணவு தானியங்கள், மருந்து பொருட்கள், போர்வை, ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் என ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் தலைமையில் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்ட வழங்கல் அதிகாரி ராம்பிரதீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் லதா தெரிவித்துள்ளார். #keralafloods
Tags:    

Similar News