செய்திகள்

மதுரையில் இன்று பக்ரீத் பண்டிகை- ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது

Published On 2018-08-22 12:37 GMT   |   Update On 2018-08-22 12:37 GMT
மதுரையில் இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. முஸ்லிம்கள் ஏழைகளுக்கு குர்பானி வழங்கினர். #bakridfestival

மதுரை:

இஸ்லாமியர்களின் தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகை மதுரையில் இன்று கொண்டாடப்பட்டது. மதுரை கோரிப்பாளையம், காஜிமார் தெரு, மகபூப் பாளை யம், ஆரப்பாளையம், அண்ணாநகர் உள்ளிட்ட அனைத்து பள்ளி வாசல் களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

அரசரடியில் உள்ள ஈத்கா மைதானத்தில் டவுன் காஜியார் தலைமையில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

ஏழைகளுக்கு உதவிடும் திருநாள் பக்ரீத் பண்டிகை என்பதால் மதுரையில் முஸ்லிம்கள் ஏழைகளுக்கு குர்பானி வழங்கினர். இதற்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டன. #bakridfestival

Tags:    

Similar News