செய்திகள்

வேலுரில் பக்ரீத் சிறப்பு தொழுகை

Published On 2018-08-22 10:25 GMT   |   Update On 2018-08-22 10:25 GMT
வேலூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி கஸ்பா, ஆர்.என்.பாளையம் ஈத்கா மைதானங்களில் ஏராளமான இஸ்லாயமிர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
வேலுரில் பக்ரீத் சிறப்பு தொழுகை

வேலூர்:

வேலூரில் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையையொட்டி புத்தாடை அணிந்து கோலாகலமாக கொண்டாடினர்.

செட்டியப்பனூர், வளையாம்பட்டு, நேதாஜிநகர், ஜாப்ராபாத் ஆகிய ஈத்கா மைதானங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைநடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து பரிமாறிக் கொண்டனர்.

இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியார்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். வாணியம்பாடி பெரியப்பேட்டை மசூதியில் இஸ்லாமியா பெண்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

மெளலவி அப்துர் ரஹமான், முப்தி இக்பால், வாணியம்பாடி வாணிடெக் நிர்வாக இயக்குனர் படேல் முகமது யூசூப், தமிழக காங்கிரஸ சிறுபான்மை துறை மாநில தலைவர் ஜெ.அஸ்லம்பாஷா, உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதேபோல், திருவண்ணாமலை, ஆம்பூர், ஆலங்காயம், ஜாப்ராபாத், உதயேந்திரம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.

Tags:    

Similar News